Thursday 15 December 2011

உடும்பன்சோலையில் அச்சத்தில் தமிழர்கள்

கேரள மாநிலம் உடும்பன்சோலையில் தமிழர்கள், உடனடியாக வெளியேறி தமிழகத்திற்கு செல்ல வேண்டும், என அங்குள்ள கேரளத்தவர்கள் கெடு விதித்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தேனி மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பால், அரிசி, இறைச்சி என எவ்வித பொருட்களும் கொண்டு செல்லப்படவில்லை. மேலும் கேரள மாநிலத்தவர்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் கேரளாவில் தமிழர்கள் மற்றும் தமிழர்களின் சொத்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. சேத்துக்குழி, சாஸ்தான்ஓடை, மங்கலம், பாரத்தோடு என பல இடங்களில் தமிழர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் உடும்பன்சோலையில், தமிழர்கள் மற்றும் கேரளத்தவர்கள் சரிபாதியாக உள்ளனர். நேற்று முன்தினம் இரவு உடும்பன்சோலை மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, உடும்பன்சோலையில் தமிழர்கள் இருக்க கூடாது என்று எச்சரித்துள்ளனர். மேலும், 24 மணி நேரத்திற்குள் கேரளாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர்.அங்கு வசிக்கும் தமிழர்கள் சார்பில் கேரள அரசின் தலைமை செயலாளருக்கு தகவல் தரப்பட்டுள்ளது. அதன்பேரில் கேரள அரசின் சிறப்பு போலீஸ் படை உடும்பன்சோலை, பாரத்தோடு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் எப்போது வேண்டுமானாலும் மோதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் தமிழர்கள் உள்ளனர்.

முல்லைப் பெரியாறு -ஏலத்தோட்டம் சூறையாடப்பட்டது

உத்தமபாளையத்தை சேர்ந்வரின் 60 ஏக்கர் ஏலத்தோட்டம் சூறையாடப்பட்டது. பங்களாவிற்கு தீ வைக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை போராட்டம் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. இதனால் இருமாநில போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். சொத்துக்கள், குறிப்பாக ஏலத்தோட்டங்கள் சேதப்படுத்தப்படுகிறது. ஏலச் செடிகள் மற்றும் மரங்களை வெட்டி அழிக்கின்றனர். நெடுங்கண்டம் மற்றும் உடும்பன்சோலை பகுதியில் தற்போது வன்முறை வெறியாட்டம் அதிகரித்துள்ளது. உத்தமபாளையத்தை சேர்ந்த பரீத்கான் என்பவருக்கு நெடுங்கண்டம் அருகில் கூலக்காவுக்கும், யானைக்காவுக்கும் இடையே 60 ஏக்கர் ஏலத்தோட்டம் உள்ளது. தோட்ட வளாகத்தில் பங்களா, ஸ்டோர் ரூம், காய் உலர்த்தும் அறை உள்ளது. நேற்று முன்தினம் கேரள கும்பல் ஒன்று புகுந்து ஏலச்செடிகளை வெட்டி அழித்தது. பரீத்கான், கேரள போலீசாருக்கு தகவல் தந்துள்ளார். போலீசாரும் பாதுகாப்பிற்கு சென்றுள்ளனர். போலீசார் பாதுகாப்பிற்கு இருக்கும் போதே, மற்றொரு கும்பல் அவரது எஸ்டேட்டிற்குள் புகுந்து எஸ்டேட் பங்களாவிற்கு, தீ வைத்தது. ஸ்டோர் ரூம், காய் உலர்த்தும் அறை என அறைகளும், தொழிலாளர் குடியிருப்புகளும் சேதப்படுத்தப்பட்டன. இதன் மதிப்பு ரூ.10 லட்சம்.

உணவு பொருட்கள் கிடைக்காமல் தமிழர்கள்

கேரளா அரசின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானதால், இடுக்கி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர்.முல்லை பெரியாறு நீர் தேக்க அளவை, 120 அடியாக குறைக்க, கேரளா அரசு தாக்கல் செய்த மனுவை, நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த விபரம் பரவியதால் இடுக்கி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழக முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு, தமிழர்களின் சொத்துகள் மீதான தாக்குதல், ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன.அடிமாலியில், வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப சென்ற தமிழர்களை, கேரளா வன்முறை கும்பல் தாக்கியது. உடும்பன்சோலை பகுதியில், தமிழர்களின் வீடுகள் அடித்து நொறுக்கி, தீ வைக்கப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான ஏலத்தோட்டங்களில் ஏலக்காய் பதப்படுத்தும் ஸ்டோர்கள், நீர் தெளிப்பு கருவிகள், ஜெனரேட்டர்கள், குழாய்கள் சேதப்படுத்தப்பட்டன. பொள்ளாச்சியிலிந்து, மறையூர் வழியாக அத்தியாவசிய பொருட்கள் தடைபடாமல் வருவதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியுள்ள தமிழ் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்காமல் தமிழர்கள் அவதிப்படுகின்றனர்.

ஏலத்தோட்டங்களில் சிக்கியுள்ள, தமிழக தொழிலாளர்களை மீட்க

கேரள ஏலத்தோட்டங்களில் சிக்கியுள்ள, தமிழக தொழிலாளர்களை மீட்கப்போவதாக, தேவாரம் சாக்குலூத்து, கோம்பை ராமக்கல்மெட்டு வனப்பதை வழியாக, கேரளா செல்ல முயன்றவர்களை, போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். இடுக்கி மாவட்ட ஏலத்தோட்டங்களில் பல ஆயிரம் தமிழக தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கேரள வன்முறை கும்பலிடம் சிக்கி சிரமப்படுகின்றனர். கேரளாவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போவதாக கூறி தேனி மாவட்டம் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், டி.மீனாட்சிபுரம், மேட்டுப்பட்டியிலிருந்து ஏராளமானோர் திரண்டனர். கேரளா முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு கேரளா எல்லையை நோக்கி சென்றனர். தேவாரத்திலிருந்து புறப்பட்டவர்கள் சாக்குலூத்து மெட்டு வழியாகவும், கோம்பையிலிருந்து சென்றவர்கள் ராமக்கல் மெட்டு வழியாகவும் கேரளாவிற்குள் ஊடுருவ முயன்றனர். அத்துமீறி கேரள எல்லைக்குள் செல்பவர்களை கண்டதும் சுட இடுக்கி எஸ்.பி., ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.போராட்டக்காரர்கள் கேரள பகுதிக்குள் நுழைந்தால் நிலமை விபரீதமாகும் என்பதால், திண்டுக்கல் டி.ஐ.ஜி., சந்தீப் மாத்தூர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். சாக்குலூத்து மெட்டு பாதையில் நுழைய முயற்சித்தவர்களை சக்கணகுண்டு அருகிலும், ராமக்கல்மெட்டுக்கு சென்றவர்களை பெருமாள் மலைக்கோயில் அருகிலும் தடுத்தனர். தடையை மீறி சிலர் காட்டுப்பாதை வழியாக செல்ல முயன்றனர். கேரளாவில் பாதிக்கப்படும் தமிழர்கள் எளிதில் ஊருக்கு திரும்ப இந்த பாதைகள் பயன்படுகின்றன. இந்த பாதைகளை முற்றுகையிட்டால், தமிழக தொழிலாளர்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்படுமென்று போலீசார் சமரசம் செய்தனர். போலீசாரின் சமரசத்தால் போராட்டக்காரர்கள் ஊர்களுக்கு திரும்பினர்.

கேரளாவில் வன்முறைக்கும்பலின் வெறியாட்டம்

கேரளாவில் வன்முறைக்கும்பலின் வெறியாட்டம் உச்சகட்டம் அடைந்துள்ளதால், உடும்பன்சோலை தாலுகாவிலிருந்து 5 ஆயிரம் தமிழக குடும்பங்கள் வெளியேறி உள்ளனர். மூடை, முடிச்சுகளுடன் வெளியேறுபவர்களையும், தமிழக எல்லையில் வன்முறையாளர்கள் அடித்து உதைப்பதால், எஸ்டேட்களில் தங்கி இரவில் வனப்பாதை வழியாக வருகின்றனர். முல்லை பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவை, 120 அடியாக குறைக்க, கேரளா அரசு தாக்கல் செய்த மனுவை, நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த விபரம் பரவியதால் இடுக்கி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழக முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு, தமிழர்களின் சொத்துகள் மீதான தாக்குதல், ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன. உடும்பன்சோலை தாலுகாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் உள்ளன. மூன்று தலைமுறைகளாக தங்கியுள்ள இவர்களுக்கு தமிழகத்தில் வீடில்லை. இவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு இரவில் கேரள வன்முறை கும்பல் சென்று வீடுகளை அடித்து நொறுக்கி, தீ வைக்கின்றனர். தமிழர்களுக்கு சொந்தமான ஏலத்தோட்டங்களில் ஏலக்காய் பதப்படுத்தும் ஸ்டோர்கள், நீர் தெளிப்பு கருவிகள், ஜெனரேட்டர்கள், குழாய்கள் சேதப்படுத்தப்பட்டன. சதுரங்கப்பாறை மெட்டில் உள்ள தனியார் மின் காற்றாலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து, தமிழகத்திற்கு வரும் மின் வயர்களை சேதப்படுத்தியுள்ளனர். உடும்பன்சோலை பகுதியில் தங்கியுள்ள தமிழர்கள், ஒருநாள் அவகாசத்தில் வெளியேற கேரளா வன்முறை கும்பல் எச்சரித்துள்ளது.கேராவிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் கூறியதாவது;ஈஸ்வரன், 33: "உடும்பன்சோலையில் தங்கியுள்ளவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு நெடுங்கண்டம் செல்ல வேண்டும். தமிழர்களுக்கு சிகிச்சையளிக்க மறுக்கின்றனர். இங்கு, பல தலைமுறையாக வசிக்கும் தமிழர்களுக்கு சொந்தமாக ஓட்டல்கள், மளிகைக்கடைகள், வாடகை வாகனங்கள் உள்ளன. கடைகளை திறக்கவும், வாகனங்களை இயக்கவும் தடை விதித்துள்ளனர்.மகேஸ்வரி, 25:எங்கள் மூதாதையர் போடி அருகேயுள்ள புதூரை சேர்ந்தவர்கள். ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை கேரளாவில் உள்ளது. இரண்டு மாத கைக்குழந்தையுடன் காட்டுப்பாதையில் நடந்து வருகிறோம். எங்கு போய் தங்குவதென்று தெரியவில்லை.முருகன், 27: தமிழர்கள் தங்கியுள்ள பகுதியில் டிப்பர் லாரிகளில் கற்களை கொண்டு வந்து குவிக்கின்றனர். இரவிற்குள் கேரளாவை விட்டு வெளியேறா விட்டால் வீட்டிற்குள் சமாதி கட்டி விடுவோம் என்று மிரட்டுகின்றனர். கேரளா போலீசார் வன்முறையாளர்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.தேனி கலெக்டர் பழனிச்சாமி கூறுகையில், ""கேரளாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, தமிழகத்தில் வீடில்லாதவர்களை சிறப்பு முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். கேரளாவிலுள்ளவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Sunday 11 December 2011

முல்லை பெரியார் (mullai periyar)

முல்லை பெரியார் விவகாரத்தில் மத்திய அரசு udanadiyaka தலை இட வேண்டும், இதனால் பாதிக்க படுவது appavi pothu makkal than. tamilarkal keralathil velaikaka pokir